ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராஜமௌலி இயக்கியுள்ள 'பாகுபலி 2' படத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் சென்சார் முடிவடைந்து 'யுஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது. அப்போது வழங்கப்பட்ட படத்தின் நீளம் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் இருந்ததாகச் சொல்கிறார்கள். சென்சார் தரப்பில் சில காட்சிகளை நீக்கச் சொல்லியிருக்கிறார்களாம். அந்தக் காட்சிகளை நீக்கிய பின்தான சான்றிதழ் வழங்கப்படுமாம். காட்சிகள் நீக்கப்பட்ட பின் படத்தின் நீளம் சுமார் 2 மணி நேரம் 45 நிமிடங்களுக்குள்ளாக வந்துவிடும் என்கிறார்கள்.
'பாகுபலி' படத்தின் முதல் பாகம் 2 மணி நேரம் 39 நிமிடங்கள் இருந்தது. இரண்டாம் பாகமும் அந்த நீளத்திற்குள் வந்துவிடுமாம். முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் சட்டென்று முடிந்ததாக அப்போதே விமர்சனம் எழுந்தது. திடீரென 'பாகுபலியைக் கட்டப் கொன்றது ஏன் ?' என்ற கேள்வியுடன் படத்தை முடித்திருந்தார்கள். அதற்கான விடை என்ன என்பதுதான் இரண்டாம் பாகத்தின் கதையாக அமைக்கப்பட்டுள்ளது.
முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தில் கதையும், காட்சிகளும் பிரமிப்பாகவும், அழுத்தமாகவும் இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். சுமார் 6000 தியேட்டர்களில் வெளியிடப்படும் 'பாகுபலி 2', முதல் பாகத்தின் வசூலை 700 கோடி ரூபாயைக் கடந்து 1000 கோடி ரூபாய் வசூலைப் படைக்குமா என திரையுலகினர் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.