ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தனியார் தொலைக்காட்சிகளுக்கு பாடல்கள், காட்சிகள், டிரைலர்கள் ஆகியவற்றை இலவசமாக தயாரிப்பாளர்கள் வழங்கக் கூடாது என புதிதாக பொறுப்பேற்றுள்ள தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று ஒரு தகவலை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் உறுப்பினர்களுக்கு, தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது.
புதிய திரைப்படங்கள் வெளிவந்தால் அவற்றின் டிரைலர்களை இலவசமாக தொலைக்காட்சிகள் கடந்த பல ஆண்டுகளாக ஒளிபரப்பி வந்தன. அதற்கு பதிலாக அந்தப் படங்களின் பாடல்கள், காட்சிகள் ஆகியவற்றை தயாரிப்பாளர்கள் வழங்கி வந்தார்கள். அதைவைத்து திரை விமர்சனம், டாப் 10 மூவீஸ், நகைச்சுவை நிகழ்ச்சிகள், மற்ற சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அவற்றைப் பயன்படுத்தி வந்தார்கள்.
ஆரம்ப காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி சேனல்கள் பல, பாடல்களை பணம் கொடுத்து வாங்கி ஒளிபரப்பினார்கள். அதன்பின் தொலைக்காட்சிகளைப் பார்க்கும் மக்களின் ஆர்வம் அதிகரித்து, டிவிக்களில் பாடல்கள் ஒளிபரப்பினால் படங்களுக்கு நல்ல வரவேற்பு என்ற நிலை மாறியது. அதன் பின் டிவி நிறுவனங்கள் பாடல்களைப் பணம் கொடுத்து வாங்குவதை நிறுத்தின. அதோடு, டிவிக்களில் விளம்பரம் செய்து படங்களை ஓட வைக்கும் நிலைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டார்கள்.
ஒவ்வொரு முறையும் தேர்தல் நடக்கும் போதும் இப்படி ஒரு சூழ்நிலை உருவாகும். சம்பந்தப்பட்ட டிவி நிறுவனங்களை அழைத்துப் பேசுவார்கள். ஆனாலும், அவை நடைமுறைப்படுத்த முடியாமல் அப்படியே நின்று போய்விடும்.
இந்த முறை விஷால் தலைமையில் நிர்வாகிகள் வந்ததையடுத்து தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து டிவிக்களுக்கு பாடல்களை வழங்குவதை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் நேற்று டிவி சேனல்களுக்கு பாடல்களை இலவசமாகத் தர வேண்டாம் என தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
அடுத்து சம்பந்தப்பட்ட டிவி நிறுவனங்களை அழைத்து பேசி பாடல்களுக்கு ஒரு விலையை நிர்ணயம் செய்ய உள்ளார்களாம். பணம் கொடுத்து வாங்கத் தயாராக இருக்கும் டிவிக்களுக்கு மட்டுமே இனி பாடல்களை வழங்க வேண்டும் என்பது கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாம். மீறும் தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் டிரைலர்களை யு டியுபில் பலர் பார்ப்பதன் மூலமும், பாடல்களைப் பார்ப்பதன் மூலமும் பல லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது. அது போல டிவிக்களிலும் பணம் வாங்கி தயாரிப்பாளர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் முடிவெடுத்துள்ளார்களாம். இப்போது சுமார் 50க்கும் மேற்பட்ட தனியார் தொலைக்காட்சிகள் உள்ளன. ஒரு டிவிக்கு 1 லட்ச ரூபாய் என்று சொன்னால் கூட பட வெளியீட்டின் போது தயாரிப்பாளர்களுக்கு 50 லட்ச ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
எந்தெந்த தொலைக்காட்சிகள் பணம் கொடுத்து வாங்கி பாடல்களை ஒளிபரப்பப் போகிறார்கள் என்பது விரைவில் தெரிந்துவிடும்.