‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யா இருவரது திருமணம் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. இவருக்கும் நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவுக்கும் காதல் மலர்ந்து, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.
நிச்சயதார்த்தத்திற்குப் பிறகும் சில படங்கள் நடிக்க ஒப்பந்தமாகி தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சமந்தா. தெலுங்கில் தற்போது ஜுனியர் என்டிஆர் ஜோடியாக ஒரு படத்திலும், ராஜு காரி காதி 2 படத்திலும் நடித்து வருபவர், அடுத்து ராம் சரண் ஜோடியாக மற்றொரு படத்திலும் நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கில் தயாராகும் சாவித்ரி படத்திலும் நாயகியாக நடிக்க உள்ளார். தமிழில் தற்போது அநீதிக் கதைகள் படத்திலும், விஜய் ஜோடியாக புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
இந்தப் படங்களின் படப்பிடிப்பை ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்துடன் முடித்துக் கொடுத்துவிட்டு அக்டோபர் மாதம் திருமணத்திற்கு சமந்தா தயாராக உள்ளாராம். ஒரு வேளை சில படங்களின் படப்பிடிப்பு தள்ளிப் போனால் திருமணத்திற்குப் பின்பும் அவற்றை முடித்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளாராம்.
படப்பிடிப்பே ஆரம்பமாகாத சிவகார்த்திகேயன் படத்தில் சமந்தா நடிப்பது சந்தேகம் என்கிறார்கள். மற்றபடி ஒப்பந்தமான படங்களின் படப்பிடிப்பு விரைந்து முடிக்க சமந்தா தரப்பிலும் கேட்டுக் கொள்வார்கள் எனத் தெரிகிறது.
சமந்தா, நாக சைதன்யா திருமணம் இந்து - கிறிஸ்துவ முறைப்படி நடக்க உள்ளது.