ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
தமிழ் சினிமாவில், தமிழ் நடிகைகள் புகழ் பெற்றதை விட பிற மாநில நடிகைகள் தான் அதிகளவில் புகழ் பெற்றுள்ளனர். இதனால் நிறைய புதுமுகங்கள் பிற மாநிலங்களில் இருந்து தமிழில் அறிமுகமாகின்றனர். குறிப்பாக மலையாளத்திலிருந்து ஏகப்பட்ட நடிகைகள் தமிழில் நடித்து புகழ் பெற்றுள்ளனர். அந்தவகையில் இப்போது புதிதாக ஒருவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார், அவர் பெயர் சுவாதி நாராயணன்.
கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்தவர். ஆயுர்வேத டாக்டர் படித்திருக்கிறார். குச்சிப்புடி நடனத்தில் கெட்டிக்காரர். 20 வருடங்களாக குச்சிப்புடி நடனத்தில் அசத்தி வருகிறார். 12-ம் வகுப்பு படிக்கும்போது டில்லி, செங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அப்துல் கலாம் மற்றும் மன்மோகன் சிங் முன்னிலையில் குச்சிப்புடி நடனம் ஆடி அசத்தியிருக்கிறார்.
நடனம் மட்டுமல்லாது நடிப்பிலும் ஆர்வமிக்க சுவாதி நாராயணன், ஏற்கனவே மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் ‛இலை' என்ற படத்தில் அறிமுகமாகிறார். அறிமுக இயக்குநர் பினீஷ் ராஜ் இயக்குகிறார். மலைவாழ் மக்களின் கல்வியை பற்றி பேசப்போகிற படமாக இப்படம் உருவாகியுள்ளது. இதில், 10-வது படிக்கும் பெண்ணாக நடித்துள்ளார் சுவாதி. 1990களில் நடக்கிற மாதிரியான கதை. இலை படத்தில் ஹைலைட்டே விபெக்ஸ் தானாம்.
தமிழ் சினிமாவில் நடிப்பது பற்றி சுவாதி கூறுகையில், "நடிப்பில் மிகுந்த ஆசை உள்ளது. தமிழில் நிறைய படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். நடிகை ஷோபனா மாதிரி நடிப்பு, நடனம் இரண்டிலும் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது" என்று கூறுகிறார்.