ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பஞ்சாபி பெண்ணான வாமிகா இந்தி படங்களில் அறிமுகமாகி அதன்பிறகு சொந்த மொழியான பஞ்சாபி படங்களில் நடித்து வந்தார். பாலே மன்ஞ்சி ரோஜு என்ற தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அவரை கவனித்த இயக்குனர் செல்வராகவன், தன் மனைவி கீதாஞ்சலி இயக்கிய மாலை நேரத்து மயக்கம் படத்தில் நடிக்க வைத்தார்.
அந்தப் படத்தில் வாமிகாவின் நடிப்பு பேசப்பட்டது. ஆனால் படத்தின் கதையில் டபுள் ஏ இருந்ததால் படம் ஓடவில்லை. இதனால் நிறைய கனவுகளோடு தமிழ் சினிமாவுக்கு வந்த வாமிகாவுக்கு ஏற்பட்டது ஏமாற்றமே. ஒரு வருடம் கையில் படம் இல்லாமல் இருந்த வாமிகாவுக்கு மலையாள திரையுலகம் கைகொடுத்துள்ளது.
இந்தியில் சல்மான்கான் நடித்த சுல்தான் படம் மாதிரியான ஒரு மல்யுத்த படம் மலையாளத்தில் தயாராகிறது. படத்தின் பெயர் கோதா. இந்தப் படத்தில் வாமிகா மல்யுத்த வீராங்கணையாக நடிக்கிறார். இதற்காக அவர் முறையாக மல்யுத்தம் கற்று இந்தப் படத்தில் நடித்து வருகிறார். பசில் ஜோசப் இயக்கும் இந்தப் படத்தில் டொவினோ தாமஸ் சிக்ஸ்பேக் வைத்து மல்யுத்த வீரராக நடிக்கிறார். அஜூ வர்கீஸ், ரெஞ்சி பணிக்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள். விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்கிறர், ஷான் ரஹ்மான் இசை அமைக்கிறார். பஞ்சாபி பெண்ணான வாமிகா இந்தப் படத்தில் அதிதி சிங் என்ற பஞ்சாபி பெண்ணாகவே நடிப்பது குறிப்பிடத்தக்கது.