தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் வெற்றி பெற்ற படம் ‛டிராபிக்'. இப்படம் தமிழில், சென்னையில் ஒரு நாள் என்ற பெயரில் ரீ-மேக்கானது. மலையாளம் அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும் சுமாரான வெற்றியை பெற்றது. இந்நிலையில் சரத்குமார் நடிக்கும் புதிய படத்திற்கு சென்னையில் ஒரு நாள் -2 என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இது முதல்பாகத்தின் தொடர்ச்சி கிடையாது. அந்தப்படத்தை போன்று ஒரு பரபரப்பான திரில்லர் படம் என்பதால் இந்த தலைப்பை வைத்திருக்கிறார்கள். பிரபல கிரைம் மன்னன் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய ஒரு த்ரில்லர் கதையை தழுவி இப்படம் எடுக்கப்படுகிறது.
சரத்குமாருடன் முனீஸ்காந்த், அஞ்சனா ப்ரேம், ராஜசிம்ஹன் மற்றும் பலர் நடிக்கின்றனர். நிசப்தம் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாதன்யாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ஜெபிஆர் இயக்குகிறார். தீபக் ஒளிப்பதிவாளராகவும் மாயா புகழ் ராண் இசையமைப்பாளராகவும், சோலை அன்பு கலை இயக்குனராகவும் பணியாற்றுகின்றனர். கல்பதரு பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படம் பற்றி இயக்குநர் ஜெபிஆர் கூறுகையில், சென்னையில் ஒரு நாள் -2 படத்தில் சரத்குமாரின் கதாபாத்திரம் ரகசிய போலீஸ் என்றும், அவர் புலன் விசாரணை செய்யும் முறை பரபரப்பாக இருக்கும். நிச்சயம் இந்த திரைப்படம் அனைவருக்கும் ஒரு திருப்புமுனையை தரும் என்று நம்பிக்கையோடு கூறியுள்ளார்.
இப்படத்தின் பூஜை நேற்று கோவையில் நடைபெற்றது. சென்னையில் ஒரு நாள் -2 படத்தின் படப்பிடிப்பு கோவையில் தொடங்கி தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறுகிறது.