ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு |
'பாகுபலி 2' படம் அடுத்த வாரம் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படத்திற்கு நேற்று சென்சார் முடிவடைந்து யு-ஏ சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு தன்னுடைய அடுத்த படத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்கப் போகிறார் என ராஜமௌலி அறிவித்தார்.
2013ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தன்னுடைய படத்தின் பெயர் 'பாகுபலி' என்று அறிவித்த ராஜமௌலி ஜுலை 2013ம் ஆண்டு படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்தார். 2014ம் ஆண்டு கடைசியில் படத்தின் படப்பிடிப்பை முடித்து 2015ம் ஆண்டு படம் வெளிவரும் என்று அறிவித்தார்கள். அதைத் தொடர்ந்து இறுதிக் கட்டப் பணிகள் முடிவடைந்து 2015ம் ஆண்டு ஜுலை மாதம் படம் வெளிவந்தது. படப்பிடிப்பின் போதே இரண்டாம் பாகத்திற்கான 40 சதவீத படப்பிடிப்பையும் ராஜமௌலி முடித்துவிட்டார்.
2015ம் ஆண்டு கடைசியில் மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பித்து சில வாரங்களுக்கு முன்புதான் படப்பிடிப்பை முடித்தனர். முதல் பாகம் வெளிவந்து சுமார் 700 கோடி வரை வசூலித்து மிகப் பெரும் சாதனையைப் படைத்தது.
கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக 'பாகுபலி' படம் பற்றிய சிந்தனையிலிலேயே இருந்த ராஜமௌலி இன்று பாகுபலி படத்தின் கடைசி நாள் வேலை என நெகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.
“அனேகமாக, கடைசி வேலை நாள்... என்ன ஒரு பயணம், என்ன ஒரு அனுபவம். ஒரு பக்கம் மகிழ்ச்சி, மறுபக்கம் வலி என இரண்டுக்கும் இடையில் இருக்கிறேன்,” என 'பாகுபலி' படத்திற்கான கடைசி நாள் வேலை பற்றி பதிவு செய்துள்ளார்.
இந்தியத் திரையுலகில் எந்த ஒரு இயக்குனரும் செய்யாத ஒரு சரித்திர சாதனையை 'பாகுபலி' படத்தின் மூலம் நிகழ்த்திக் காட்டியிருப்பவர் ராஜமௌலி. இந்தித் திரையுலக வரலாற்றில் 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களுக்கும் மிகப் பெரும் இடம் உண்டு என்பதில் சந்தேகமில்லை.