'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபட்டி, அனுஷ்கா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ள 'பாகுபலி 2' படத்தின் சென்சார் நிறைவடைந்துவிட்டது. படத்திற்கு யு-ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. சென்சார் வேலைகள் நிறைவடைந்ததால் படத்தின் வெளியீட்டு வேலைகளை தற்போது வேகப்படுத்தியுள்ளனர்.
உலகம் முழுவதும் சுமார் 6000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இந்தியாவில் மட்டும் சுமார் 2500க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும், அமெரிக்கா, கனடாவில் 1000க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும் உலகின் மற்ற பகுதிகளில் 3500க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும் படத்தை வெளியிட உள்ளார்கள்.
'பாகுபலி 2' படம் 28ம் தேதி வருவதால் இந்த வாரமும், அடுத்த வாரம் அதிகப் படங்கள் வெளியாகவில்லை. அனைவருமே மே மாதத்திற்குப் பிறகு தங்களது வெளியீட்டை தள்ளிப் போட்டு விட்டார்கள்.
உலகம் முழுவதும் இவ்வளவு தியேட்டர்களில் வெளியானாலும் கர்நாடக மாநிலத்தில் மட்டும் வெளியாகுமா என்பது இன்னமும் சந்தேகமாகவே உள்ளது. 'பாகுபலி 2' படத்திற்கு கன்னட அமைப்புகள் திடீரென பிரச்சனை செய்வதை தயாரிப்பு தரப்பில் விரும்பவில்லை என்று கூறுகிறார்கள்.
இந்தப் படத்தில் சத்யராஜ் ஒரு நடிகர் மட்டும்தான். மற்றபடி படத்திற்கு முதலீடு செய்தது, நடித்தது என பெரும்பாலானோர் தமிழ்நாட்டுக்கு சம்பந்தமில்லாதவர்கள். 8 வருடங்களுக்கு முன்பு சத்யராஜ் பேசியதற்கு இப்போது வந்து பிரச்சனை செய்வது சரியல்ல என்றும் தயாரிப்பு தரப்பில் கூறுவதாகச் சொல்லப்படுகிறது.
இருந்தாலும் பிரச்சனையை தீர்த்து வைக்க தயாரிப்பாளர்கள் முயற்சி எடுத்து வருகிறார்களாம். கர்நாடகாவில் 'பாகுபலி 2' வெளியாகவில்லை என்றால் சுமார் 50 கோடி வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என சொல்லப்படுகிறது.