ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கொத்தமங்கலம் சுப்பு என்றாலே தில்லானா மோகனாம்பாள் படத்துக்கு கதை, திரைக்கதை எழுதியவர் என்று தான் நினைவுதான் வரும். ஆனால் குறுகிய காலத்தில் நிறைய சாதித்தவர் அவர். அவர் சாதனையின் உச்சம் எதுவென்றால் அது தமிழ் சினிமாவின் பிரமாண்ட படங்களில் ஒன்றான அவ்வையார் படத்தை இயக்கியது. அதோடு ஜெமினி கணேசன் அறிமுகமான மிஸ்.மாலினி படத்தை இயக்கியதும் அவர்தான். இதுதவிர வள்ளியின் செல்வன் என்ற படத்தையும் இயக்கினார். 3 படங்களுமே வெற்றிப் படமாக இருந்தாலும் ஏனோ அவர் தொடர்ந்து படம் இயக்கவில்லை. சினிமாவில் இனி நடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருந்த கே.பி.சுந்தராம்பாளை கன்வீஸ் செய்து மீண்டும் நடிக்க அழைத்து வந்ததும் கொத்தமங்கலம் சுப்புதான்.
தமிழ் சினிமாவின் வெள்ளிவிழா படங்களான சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள் (கமல் நடித்த படம் அல்ல), வஞ்சிக்கோட்டை வாலிபன், இரும்புத்திரை, மோட்டார் சுந்தரம் பிள்ளை, தில்லானா மோகனாம்பாள், உள்பட பல படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதினார். பல படங்களுக்கு பாடல்களும் எழுதியுள்ள கொத்தமங்கலம் சுப்பு பல படங்களில் வில்லனாகவும், காமெடியனாவும், குணசித்ர நடிகராகவும் நடித்துள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் பிறந்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலத்தில் தனது மாமனார் வீட்டில் வளர்ந்ததால் கொத்தமங்கலம் சுப்பு என்று அழைக்கப்பட்டார். 7ம் வகுப்பு வரை மட்டுமே படித்த சுப்பு, பத்திரிகைகளுக்கு கதை எழுதினார். அவரது திறமையை உணர்ந்த எஸ்.எஸ்.வாசன் அவரை தனது கதை இலாகாவில் சேர்த்துக் கொண்டார். அவர் மீது அபார நம்பிக்கை கொண்டே தனது பிரமாண்ட தயாரிப்பான அவ்வையார் படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு கொடுத்தார். மிகப்பெரிய வில்லுப்பாட்டு கலைஞர் என்பது கொத்தமங்கலம் சுப்புவின் இன்னொரு முகம்.