அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன், அப்படத்தின் வெற்றியை அடுத்து நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடிக்கும் ஒரு பக்க கதை படத்தை இயக்கினார். படம் தயாராகி ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு மேலாக ஒரு பக்க கதை படம் முடங்கிக் கிடக்கிறது. இதனால், விஜய் சேதுபதிக்கு ஒரு கதை சொன்னார் பாலாஜி, அது பிடித்துபோனது.
பாலாஜி தரணீதரன் - விஜய் சேதுபதி மீண்டும் இணையும் சீதக்காதி படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தனக்கு கால்ஷீட் கொடுத்து உதவிய விஜய் சேதுபதிக்கு அவரே எதிர்பாராத அளவுக்கு பெரிய சம்பளத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறார் பாலாஜி தரணீதரன்.
விஜய்சேதுபதியின் 25 படமாக உருவாகும் சீதக்காதி படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 24ம் தேதி தொடங்கவுள்ளது. இப்படத்தில் மேடைக் கலைஞராக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். மேடைக் கலைஞரின் வாழ்க்கை பயணம்தான் சீதக்காதியின் கதையாம்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தைப் போலவே இந்தப்படத்திலும் காமெடியான திரைக்கதை இருக்குமாம். இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடி என்று யாருமே கிடையாது. அதே சமயம், நிறைய கதாநாயகிகள் இப்படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளார்கள். அதில் நயன்தாராவும் அடக்கம். இது குறித்து நயன்தாராவிடம் விஜய்சேதுபதியே பேசியுள்ளதாக தகவல்.