இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
விஜய்சேதுபதியை வைத்து சில வருடங்களுக்கு முன் சீனுராமசாமி இயக்கிய 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் வைரமுத்து எழுதிய 'கள்ளிக்காட்டில் பிறந்த தாயே' என்ற பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. ஏற்கனவே 5 முறை தேசிய விருது பெற்ற வைரமுத்துவுக்கு சீனுராமசாமியின் தென்மேற்கு பருவக்காற்று படம் 6-ஆவது முறையாக தேசிய விருதை தேடிக்கொடுத்தது. அப்போது சீனுராமசாமியை பாராட்டி, சிலாகித்து பேட்டிகளைக் கொடுத்தார் வைரமுத்து.
அதே வைரமுத்துவுக்கு இப்போது, 7 ஆவது முறையாக தேசிய விருது கிடைத்திருக்கிறது. இம்முறையும் சீனுராமசாமியின் படத்தில் அதாவது தர்மதுரை படத்தில் இடம்பெற்ற 'எந்தப்பக்கம்' என்ற பாடலுக்காகத்தான் வைரமுத்துவுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது கிடைத்ததும் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட வைரமுத்து, பலருக்கும் நன்றி தெரிவித்தார்.
அப்படி நன்றி தெரிவித்தபோது தர்மதுரை படத்தின் இயக்குநரான சீனு ராமசாமிக்கு நன்றி தெரிவிக்க மறந்துவிட்டார் வைரமுத்து. அவருடைய 'மறதி' சீனுராமசாமியை கடும் அப்ஸெட்டுக்குள்ளாக்கிவிட்டது. இதனால் சீனுராமசாமி வருத்தத்தில் இருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசிக்கொள்கிறார்கள்.