ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ராஜமவுலி இயக்கியுள்ள பிரமாண்ட படம் பாகுபலி-2. ஏப்ரல் 28ந்தேதி திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தை கர்நாடகாவில் வெளியிட அங்குள்ள கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதற்கு காரணமாக, கடந்த 10 வருடத்துக்கு முன்பு காவிரி பிரச்சினை குறித்து கன்னடர்களுக்கு எதிராக நடிகர்கள் பேசினார்கள். அதனால் அவர்கள் மன்னிப்பு கேட்டால் மட்டுமே கர்நாடகத்தில் பாகுபலி-2 படத்தை வெளியிட அனுமதிப்போம் என்று கூறியுள்ளனர்.
இந்தநிலையில் இயக்குநர் ராஜமவுலி விடுத்துள்ள செய்தியில், காவிரி பிரச்சினையில் நடிகர்கள் பேசியதாக கூறப்படும் வீடியோ வெளியாகி 10 ஆண்டுகளாகிவிட்டது. அதன்பிறகு அவர்கள் நடித்த 30 படங்களுக்கு மேல் கர்நாடகாவில் வெளியாகியுள்ளன. நான் இயக்கிய பாகுபலி படம்கூட வெளியானது. அப்போதெல்லாம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் பாகுபலி-2 வெளியாகும் நேரத்தில் போராட்டத்தில் ஈடுபடுவது எந்தவிதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ள ராஜமவுலி, பாகுபலி-2 படத்திற்கான எதிர்ப்பை விலக்கிக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.