'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
திருக்குமரன் எண்டர்டெய்ன்மென்ட் சி.வி.குமார் இயக்கியுள்ள முதல் படம் மாயவன். சந்தீப் கிஷன், லாவன்யா திரிபாதி, டேனியேல் பாலாஜி, ஜாக்கி ஷெராப் உள்பட பலர் நடித் துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது.
அப்போது நடிகர் சந்தீப்கிஷன் பேசுகையில், சமீபத்தில் நான் நடித்து வெளியான மாநகரம் படத்திற்கு நல்ல விமர்சனம் வெளியானது. அந்த வெற்றியில் பெரும்பங்கு பத்திரிகைகளுக்குத்தான் போய் சேரும். அதுக்கு அப்புறம் மீடியாக்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் இந்த மேடையை மீடியாக்களுக்கு நன்றி சொல்ல பயன்படுத்திக்கொள்கிறேன்.
மாநகரம் படம் முடிந்து நான்கு மாதங்களில் இந்த மாயவன் படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டார்கள். இந்த படத்தில் நடிப்பதில் நான் பெருமைப்படுகிறேன். கார ணம். தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் நான் நாயகனாக நடிக்கிறேன். இதன்பிறகு அவர் எத்தனை படங்கள் இயக்கினாலும் முதல்பட நாயகனாக நான் எப்போதுமே அவரது ஞாபகத்தில் இருப்பேன். இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னவர் டைரக்டர் யார் என்று சொல் லவே இல்லை. ரொம்ப நாளைக்கு பிறகுதான் சொன்னர். சந்தோசமாக இருந் தது.
மேலும், சி.வி.குமார் தனது உதவியாளர்களின் ஐடியாக்களுக்குகூட மதிப்பு கொடுத்து ஏற்றுக்கொள்வார். அவர் ஒரு தயாரிப்பாளராக இந்த அளவுக்கு வெற்றிபெற அதுவும் காரணம். ஒருநாள்கூட செட்டில் தான் தயாரிப்பாளர் என்பதை காட்டிக்கொள்ளவே மாட்டார். ஒரு நண்பராகவே நடந்து கொள்வார். இந்த படத்தில் ஆக்சன் இல்லை. இது ஒரு மர்டரை மையப்படுத்திய யதார்த்தமான கதை. இந்த படத்தில் குமரன் என்ற போலீஸ் வேடத்தில் நான் நடித்திருக்கிறேன். இந்த படத்திற்காக நாலரை மணி நேரம் டப்பிங் பேசியிருக்கிறேன். போன வாரம்தான் படம் பார்த்தேன். நடிகர்கள் பண்ணியுள்ள தவறு தெரியாமல் ஆர்ஆர் இசை அமைந்திருந்தது. அதற்காக ஜிப்ரானுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன் என்றார்.