தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த சில மாதங்களில் சர்ச்சை பிரியர்களின் செல்லப்பிள்ளையாகவே மாறிவிட்டார் மலையாள நடிகர் திலீப்.. அவர் அமைதியாக இருந்தாலும் பிரச்சனைகள் அவர் வீடுதேடிவந்து கதவை தட்டினால் அவர்தான் என்ன பண்ணுவார்..? அப்படித்தான் சமீபத்தில் அவருடைய கேரவன் வாகனம் விபத்து ஒன்றை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் வந்துவிட்டது என அவர் மீது திடீர் குற்றச்சாட்டு எழுந்தது,
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள நடிகர் திலீப், தனக்கும் அந்த விபத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றும் தனக்கென கேரவன் வாகனமே இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் தான் விசாரித்த வகையில் அந்த கேரவன் வாகனம் தான் நடித்துவரும் 'கம்மார சம்பவம்' படத்தின் ஷூட்டிங்கில் பயன்படுத்தப்படும் வாகனம் என்றும், அது புரடக்சன் மேனேஜர் சமபந்தப்பட்டது என்றும் அந்தப்படத்தில் நடிக்கிறேன் என்பதைத்தவிர தனக்கும் அந்த கேரவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறியுள்ளார் திலீப்.