அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் |
கேரளாவின் கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மற்ற கலெக்டர்களில் இருந்து நிறையவே வித்தியாசப்படுபவர். மாபெரும் கலாரசிகர்.. ஒருபக்கம் தனது பணிகளை எந்த வித சுணக்கமும் இல்லாமல், எந்த வித சர்ச்சைகளுக்கும் இடம் கொடுக்காமல் செய்துவரும் பிரசாந்த், இன்னொரு பக்கம் மலையாள சினிமாவின் தீவிர ரசிகர்.. கலெக்டர் என்பதற்காக சினிமாவை ஒதுக்கிவைக்க அவர் விரும்பவில்லை. தற்போது மலையாள இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன் இயக்கிவரும் 'டிவஞ்சிமூல கிராண்ட் பிரிக்ஸ்' என்கிற படத்திற்கு கதையும் எழுதியுள்ளாராம் கலெக்டர் பிரசாந்த்.
அனில் ராதாகிருஷ்ணன் மேனன் இதற்கு முன் இயக்கிய ''லார்ட் லிவிங்ஸ்டோன் 7000 கண்டி' படத்திலும் குஞ்சாக்கோ போபன் தான் ஹீரோவாக் நடித்துள்ளார். இந்தப்படத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடிக்கிறார் குஞ்சாக்கோ போபன், இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் கடந்த 2003ல் லோகிததாஸ் இயக்கத்தில் வெளியான 'கஸ்தூரிமான்' படத்தில் நடித்த கேரக்டரையே இதில் கதாபாத்திரமாக மாற்றியுள்ளார்களாம். அதுமட்டுமல்ல,படத்தின் மற்ற முக்கிய கேரக்டர்களையும் அவர்களின் முந்திய படங்களின் கதாபாத்திரங்களில் ஒன்றின் நீட்சியாகவே காட்ட இருக்கிறார்களாம்.