தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் என்பவரால் எழுதப்பட்டு அதிகம் விற்பனையான 'ஆடுஜீவிதம்' நாவலை படமாக எடுத்தால் அதில் தான் நடிப்பதாக கூறினார். ஆனால் அந்த நாவலை பிரபல மலையாள இயக்குனர் பிளஸ்சி படமாக இயக்கவிருப்பதாகவும் அதில் பிருத்விராஜ் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. பல கனவுகளோடு சவூதி அரேபியாவுக்கு சென்று அங்கே அடிமையாய் பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞனைப் பற்றிய கதையைச் சொல்கிறது.
மலப்புரத்தில் இருந்து சவூதிக்கு வேலைக்கு செல்லும் பட்டதாரி இளைஞராக பிருத்விராஜ் நடிக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக இந்தப்படம் பற்றிய பேச்சு அவ்வப்போது எழுவதும், பின் அமுங்குவதுமாக இருந்து வந்தது.. கடந்த சில நாட்களாக இந்தப்படத்தை பிருத்விராஜ் கைவிட்டுவிட்டார் என்று ஊடகங்களில் ஒரு செய்தி பரவியது.. இது தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கும் பிருத்விராஜின் காதுகளுக்கும் போனது.. உடனே இது குறித்து மறுப்பு தெரிவித்துள்ள பிருத்விராஜ், இந்தப்படம் கைவிடப்படவில்லை என்றும் வரும் நவ-17 முதல் மார்ச்-19 வரையிலான 15 மாதங்களை இதற்காக ஒதுக்கியுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.