ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இசை அமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை தனது அனுமதியின்றி யாரும் பாடக்கூடாது என்று முன்னணி பாடகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். குறிப்பாக எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அவர் நோட்டீஸ் அனுப்பியது, திரையுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இது விஷயத்தில் இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் திரையுலகினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கோவை வந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தனக்கு பத்மவிபூஷன் விருது கிடைத்தது கடவுள் அருளால்தான். விருதுக்காக நான் அதிக சந்தோஷம் அடைவதில்லை என்றார். பின்னர் நிருபர்கள் இளையராஜா தன் பாடல்களை பாடக்கூடாது என்று பாடகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பற்றிக் கேட்டனர். அதற்கு அவர் "நான் யாருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பவில்லை. அனுப்பியவரிடம் இந்த கேள்வி கேளுங்கள்" என்றார்.
தேசிய விருதுகள் வழங்குவதில் பாராபட்சம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறதே? என்று கேட்டபோது "குற்றச்சாட்டை கூறியவர்களிடமும், தேசிய விருது வழங்குபவர்களிடமும் சென்று கேளுங்கள்" என்று கூறியபடி கோபத்துடன் வேகமாக எழுந்து சென்றார். பொதுவாக ஜேசுதாஸ் கோபம் கொள்ளமாட்டார். ஆனால் நேற்று அவர் நடந்து கொண்ட விதம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.