Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்ரீமன் தம்பியின் சினிமா கனவு நிறைவேறியது

17 ஏப், 2017 - 13:39 IST
எழுத்தின் அளவு:
sriman-brother-cine-entry-made-success

சமீபத்தில் வெளியான அட்டு படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்திருப்பவர் பிரபாகர். இவர் பிரபல நடிகர் ஸ்ரீமனின் தம்பி. பல வருட போராட்டங்களுக்கு பிறகு இப்போது நடிகராகி இருக்கிறார். தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் அட்டு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். அடுத்து அதர்வா நடிக்கும் ஒத்தைக்கு ஒத்த படத்தில் நடித்து வருகிறார்.


தனது சினிமா போராட்டம் பற்றி பிரபாகர் கூறியதாவது: சினிமா ஆர்வம் என்னைப் பாடாய்ப் படுத்தியதால் சினிமாவுக்கு வந்தேன். தெலுங்கில் சில படங்களில் நடித்தேன். பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் கூட நடித்து இருக்கிறேன். அது மறக்க முடியாத அனுபவம் தான் என்றாலும், தமிழில் நல்ல வாய்ப்புக்காகவே நீண்டநாள் காத்து இருந்தேன். அப்போது வந்த படம் தான் அட்டு.


படமாக்கும் போதுதான் மிகவும் சிரமப் பட்டோம். காலையில் 6,30க்கு படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்குப் போய்விட வேண்டும். எல்லாம் முடிந்து வீடு திரும்ப இரவு 10 .30 மணி ஆகிவிடும். கொடுங்கையூர் குப்பை மேட்டில்தான் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்தது. முடிந்து தினமும் அலுவலகம் வர வேண்டும். வந்து அடுத்த நாள் அங்கே எடுக்கப் போகும் காட்சிகள் திட்டங்கள் பற்றிய ஏற்பாடுகளை அறிந்து கொண்ட பிறகுதான் வீடு செல்ல வேண்டும். படப்பிடிப்பு நடக்கும் கொடுங்கையூர் குப்பை மேட்டில் எங்கு பார்த்தாலும் ஒரே குப்பை மயம்தான். ஒரு பக்கம் புகைந்து கொண்டிருக்கும்.


இன்னோரிடத்தில் விஷப்புகை மேலே வந்துகொண்டிருக்கும். எனக்கு 8 ஆண்டு காலப் போராட்டம் , படம் 3 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு எடுக்கப்பட்டது. படத்தில் என்மேல்தான் இண்டர் வெல் திருப்பம் முடியும். படம் பார்த்து பலரும் பாராட்டும் போது எல்லா கஷ்டங்களும் காணாமல் போய்விடுகின்றன.. அட்டு வுக்குப் பின் அதர்வாவின் ஒத்தைக்கு ஒத்தை படத்தில் நடிக்கிறேன். அதில் பாசிட்டிவ் ரோல். என்கிறார் பிரபாகர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in