மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கடவுள் அருளால், பத்ம விபூஷண் விருது கிடைத்துள்ளது, என, பிரபல பாடகர் ஜேசு தாஸ் கூறினார். கோவையில், தனவர்ஷா அறக்கட்டளை சார்பில், அபூர்வ ராகத்துக்கு குரு வணக்கம் எனும் தலைப்பிலான, இசை நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், பிரபல பாடகரும், சமீபத்தில், பத்ம விபூஷண் விருது பெற்றவருமான, ஜேசுதாஸ் பங்கேற்றார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில், கடவுள் அருளால், பத்ம விபூஷண் விருது கிடைத்துள்ளது. கடவுள் தரும் சந்தோஷம், துக்கம் இரண்டையும், சமமாகத்தான் பார்க்கிறேன்; கடவுளின் அம்சங்கள் தான் நாம், என்றார். இசையமைப்பாளர், இளையராஜா, பாடகர், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு வக்கீல் நோட் டீஸ் அனுப்பிய விவகாரம் குறித்து, நிருபர்கள், ஜேசுதாசிடம் கேள்வி எழுப்பியதற்கு, நான் யாருக்கும் நோட்டீஸ் அனுப்ப மாட்டேன், என்றார்.