ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு ஜோக்கை பேசுவதற்கு முன்பு, ஒரு பத்து தடவை ஹோம் ஒர்க் செய்து பார்த்து விட்டுத்தான் லைவ் நிகழ்ச்சிகளில் பேசுவேன். இப்போது போட்டி அதிகமாக இருப்பதால், என்னை தயார்படுத்த இப்படி ஹோம் ஒர்க்கெல்லாம் செய்து விட்டு சேனலுக்கு வருகிறேன் என்கிறார் தொகுப்பாளர் கதிர்.
தினமலர் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டி... : தற்போது நான் ஆதித்யா சேனலில் ஆல் இன் ஆல் அழகுராஜா, வாங்க சிரிக்கலாம், சண்டே கலாட்டா, ஹலோ மிஸ்டர் ஆல் இன் ஆல் -என பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருக்கிறேன். நான் பங்கு பெறுவது எல்லாமே காமெடி நிகழ்ச்சிகள்தான். இந்த நிகழ்ச்சிகளுக்கு ஸ்கிரிப்டும் நான்தான். சண்டே கலாட்டா மட்டும் இன்னொரு அண்ணன் பண்ணுகிறார். நான் பப்ளிக்கோட பிரண்டு. சிலர் சீரியசாக பேசுவார்கள். சிலர் காமெடியாக பேசுவார்கள். அவர்கள் பேசும் தொனியைக்கேற்ப நானும் பேசுவேன்.
மேலும், நான் பண்ணும் காமெடியை மக்கள் ரசிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். அதனால் நான் எல்லா காமெடியன்களையுமே பாலோ பண்ணுவேன். அவங்க பண்ணாத ஒரு விசயத்தை நாம் பண்ணினால்தான் நிற்க முடியும் என்பதால் அதற்கேற்ப புதிதாக முயற்சிக்கிறேன். பெரியவர்கள், குடும்ப பெண்கள் என அனைவரும் லைவ் நிகழ்ச்சியில் பேசுவது போன்று என்னுடன் குழந்தைகளும் அதிகமாக பேசுவார்கள். நான் எல்லோரையும் கவர் பண்ணும் வகையில் காமெடி செய்வதால் இப்படி எல்லாதரப்பு நேயர்களும் கிடைக்கிறார்கள்.
குறிப்பாக, குழந்தைகள் மத்தியில் யானை ஜோக் என ஒரு விசயம் சொல்வேன். ஒரு மூன்று யானையை வைத்து சொல்வேன். மூன்று யானை வந்து பேய் படம் பார்க்க போச்சிது. ஒரு யானை பயந்தது, ஒரு யானை பயப்படல, ஏன் என்று கேட்பேன். நேயர்கள் ஒவ்வொரு பதில் சொல்வார்கள். இறுதியில் ஒரு யானைக்கு கல்யாணம் ஆயிடுச்சாம். அதனால அது சினிமாவுக்கு போகல என்பேன். அந்த மாதிரி அன்றாடம் நம்ம வாழ்க்கையில் இருக்கிற விசயங்களை எடுத்து பேசுவேன். இதனால் என்னை குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும் என்று கூறும் தொகுப்பாளர் கதிர், பீச்சாங்கை, உள்குத்து, விதிமதி, இரும்புத்திரை ஆகிய படங்களிலும் காமெடியனாக நடித்து வருகிறார்.