ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு- ராகுல் ப்ரீத் சிங் இணைந்து நடித்து வரும் படம் 'ஸ்பைடர். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்ற மகேஷ் பாபுவிடம் நடிகர் விஜய்யுடன் நடிப்பதை பற்றி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்து மகேஷ் பாபு, " நான் சென்னையில் தான் பிறந்து, வளர்ந்தேன். இங்குள்ள பிரபல தனியார் கல்லூரியில் படித்தேன். படித்து முடித்த பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன் என்ற படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கவிருந்தேன். ஆனால் இப்படத்திற்கான திரைக்கதை அமைக்க முடியாமல் போனதாலும், பல்வேறு காரணங்களாலும் இப்படம் இயக்கப்படவில்லை.
தற்போது விஜய்யுடன் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ஒரு சில கண்டிஷன் மட்டும் இருக்கிறது என்று கூறினார். அது என்னவென்றால், படத்தில் எனக்கும், விஜய்க்கும் சமமான கதாபாத்திரம் இருக்க வேண்டும். இப்படத்தின் கதையை திறமையான இயக்குநர் தான் இயக்க வேண்டும். எங்கள் படத்தில் இருவருக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசால் அப்படி ஒரு படம் இயக்க முடியும் என்று நான் எண்ணுகிறேன். அவ்வாறு ஒரு நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் விஜய்யுடன் இணைந்து நடிக்க தயாராக உள்ளேன்"என்றார்.