ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? |
பாலிவுட்டில் முன்னணியில் இருந்த நடிகைகள் கரீஷ்மா கபூரும் ஒருவர். இவர் பிரபல தொழிலதிபர் சந்தீப் தோஷ்னிவாலின் திருமணம் செய்ய இருப்பதாக சில மாதங்களுக்கு தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த திருமணத்திற்கு தடை ஏற்பட்டு இருந்தது. தற்போது அந்த தடை விலகியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து பெற்ற இந்தி நடிகை கரீஷ்மா கபூர், அண்மை காலமாக தமது நண்பரான தொழிலதிபர் சந்தீப் தோஷ்னிவாலுடன் பொது இடங்களில் ஒன்றாக தோன்றுவது அதிகரித்து வந்தது.
இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக செய்திகளும் வெளியாகின . ஆனால், சந்தீப்பின் மனைவி மருத்துவர் ஆஷ்ரிதா கணவரை விட்டு பிரிந்து செல்ல தொடர்ந்து மறுத்து வந்தார். இந்நிலையில், ஆஷ்ரிதா விவகாரத்துக்கு தற்போது சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால, சந்தீப் தோஷ்னிவாலும், கரீஷ்மாவும் திருமணம் செய்வதில் இருந்த தடை முடிவு பெற்று இருக்கிறது . கரீஷ்மா கபூரின் முதல் கணவர் அண்மையில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.