'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
என்னம்மா கண்ணு, இங்கிலீஷ்காரன் உள்பட பல படங்களை இயக்கியவர் ஷக்தி சிதம்பரம். தற்போது ஜீவன் நடித்துள்ள ஜெயிக்கிற குதிரை படத்தை இயக்கியிருக்கிறார். தற்போதைய தயாரிப்பாளர் சங்கத்தில் யாரேனும் தப்பு செய்ய நினைத்தால் சிவாஜி படத்தில் வரும் ரஜினி மாதிரி தண்டனை கொடுப்பார் விஷால் என்கிறார் இவர்.
அதுகுறித்து ஷக்தி சிதம்பரம் கூறுகையில், பாம்புசட்டை நல்ல படம். ஆனால் தியேட்டர் பிரச்சினையால் அந்த படம் சரியாக ஓடவில்லை என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால் இது எல்லாமே வேறு ஒருவர் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்தபோது நடந்தது. ஆனால் இப்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால்.
சினிமாவை வி.மு- வி.பி என்று பிரிக்கலாம். அதாவது விஷாலுக்கு முன்-விஷாலுக்கு பின் என்று சொல்லலாம். இனிமேல் தமிழ் சினிமாவில் சின்ன படங்களுக்கு பொற்காலமாக இருக்கும் என்பதை ஆணித்திறமாக சொல்லிக் கொள்கிறேன்.
ஏனென்றால், ஏப்ரல் 2-ந்தேதி தமிழ் சினிமாவுக்கு சுதந்திரம் கிடைத்த நாள் என்று சொல்லலாம். அன்று இரவு 7.30 மணிக்கு தமிழ் சினிமாவுக்கு பிடித்திருந்த ஏழரை சனி அன்றோடு போய் விட்டது. 7.31ல் இருந்து வேறு ஒரு சினிமா ஸ்டார்ட் ஆயிடுச்சு. ஏன் சொல்றேன்னா. ஏப்ரல் 3-ந்தேதி விஷால்தரப்பினர் பதவி பிரமாணம் எடுக்கிறார்கள். ஏப்ரல் 4-ந்தேதி நான் ஒரு சின்ன பிரச்சினைக்காக போயிருந்தேன். போன உடனே விஷால், கதிரேசன் எல்லோருமே இருந்தார்கள்.
என்ன மேட்டர் சார்? என்றார்கள். விசயத்தை சொன்னேன். இரண்டே நிமிடத்தில் சம்பந்தப்பட்ட ஆளை கூப்பிட்டார்கள். சார் இது இது கைகொடுங்க அவ்வளவுதான். ஸ்டில் எடுத்தார்கள். பொன்னாடை போர்த்தினார்கள். கிளம்புங்க என்றார்கள். முதல்வன் படத்தில் அர்ஜூன் பண்ணின மாதிரி பண்ணினார் விஷால்.
அதே மாதிரி தப்புத்தாண்டா யாராவது பண்ணினா சிவாஜி படத்தின் பாஸ் மாதிரி கண்டிப்பா தண்டனை கொடுப்பார் விஷால். தப்பு பண்ணுறவங்க அதுக்கும் தயாராக இருக்கனும் என்றார்.