பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
களவாணி படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்தவர் ஓவியா. கேரளத்து நடி கையான இவருக்கு குடும்ப நடிகையாக சினிமாவில் இடம்பிடிக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்தது. ஆனால் சரியான படங்கள் கிடைக்காததால் பின்னர், சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு படத்தில் கவர்ச்சி கதாநாயகியாக உருவெடுத்தார்.
பின்னர் மதயானைக்கூட்டம், புலிவால், யாமிருக்க பயமேன், சண்டமாருதம், 144, ஹலோ நான் பேய் பேசுறேன் என பல படங்களில் நடித்தார். இந்நிலையில், தற்போது அருள்நிதி நடிக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக அடுத்த மாதம் சென்னை வருகிறார் ஓவியா.
இதுகுறித்து ஓவியா கூறுகையில், இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் கமிட்டாகியிருக்கிறேன். ஆனால் என்ன கதை, எனக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பது இன்னும் முழுமையாக தெரியவில்லை. மேலும், எனக்கு வருடத்துக்கு 4 படங்களிலாவது நடித்து விட வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் நான் எதிர்பார்ப்பது போன்ற அழுத்தமான வேடங்கள் கிடைக்கவில்லை.
அதனால் ஏற்பட்ட வெறுப்பில்தான் தேடிவந்த சில தமிழ்ப்படங்களை ஒத்துக் கொள்ளாமல், தமிழுக்கு சிறிய பிரேக் கொடுத்தேன். இந்த இடைவெளியில் தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வந்தேன். அதில் ஒரு படம் மே மாதம் வெளியாகிறது. மேலும், இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் நடிக்கும் நான், இதன்பிறகு என்னை மாறுபட்ட கோணங்களில் வெளிப்படுத்தும் கதைகளை எதிர்பார்க்கிறேன்.
இதுவரை 13 படங்களில் நடித்துவிட்டேன். என்றாலும், எனக்கு மனதிருப்தி கொடுக்கக்கூடிய கதைகள் இன்னும் அமையவில்லை என்று கூறும் ஓவியா, இனிமேல் தமிழை மட்டுமே நம்பியிருக்காமல் தெலுங்கு படங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தப்போகிறேன் என்கிறார்.