இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'ப. பாண்டி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தனுஷ் தற்போது பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். அவருடை இயக்கத்தை விமர்சகர்களும், திரையுலகத்தினரும் பாராட்டி வருகிறார்கள். 'ப. பாண்டி' படம் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்பு, மீண்டும் 'வட சென்னை' படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடங்களுக்கு நடைபெறும் எனத் தெரிகிறது. அடுத்த கோடை விடுமுறையில்தான் மூன்று பாகங்களாக உருவாக இருக்கும் 'வட சென்னை' படத்தின் முதல் பாகத்தைத் திரையில் பார்க்கலாம்.
தனுஷ் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள 'வேலையில்லா பட்டதாரி 2' படம் ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகலாம். அதன் பின் 'வட சென்னை' படம் வெளிவரும் வரை வேறு படங்கள் எதுவும் வராத காரணத்தால் தனுஷ் உடனடியாக 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்கிறார்கள்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்து 2015ம் ஆண்டில் வெளிவந்த 'மாரி' திரைப்படம் சுமாரான வசூலைத்தான் பெற்றது. இருந்தாலும் படத்திற்கும் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. அதை வைத்தே இப்போது இரண்டாம் பாகத்தை எடுக்க தனுஷ் முடிவு செய்துள்ளார் என்கிறார்கள். படத்திற்கான கதையை இயக்குனர் பாலாஜிமோகன் சில மாதங்களுக்கு முன்பே எழுதி முடித்துவிட்டார். விரைவில் 'மாரி 2' படத்திற்கான அறிவிப்பு வெளியாகலாம்.