‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கடந்த பிப்ரவரி மாதம் நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளான நிகழ்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும் கூட, இந்த சம்பவத்தின் பின்னணியில் யாரோ முக்கியமான ஒருவர் இருக்கிறார் என பேசப்பட்டு வந்தது. குறிப்பாக நடிகர் திலீப்பின் மீது கூட சந்தேகப்பார்வை நீண்டது. இந்நிலையில் அன்றைய தினம் நடந்தது என்ன என்பது குறித்து சமீபத்தில் ஒரு மலையாள இதழுக்கு சற்று விரிவாகவே தகவல் கொடுத்துள்ளார் பாவனா.
அந்தபேட்டியில், அவர் கூறும்போது ஏற்கனவே செய்திகளில் முழுக்க அடிபட்ட கடத்தல் சம்பவத்தை விவரித்துள்ளார். அத்துடன் தான் கடத்தப்பட்டபின் காரில் ஏறிய பல்சர் சுனில் என்கிற டிரைவர் ஏஜெண்ட் பாவனாவை காரில் வைத்து வீடியோ காட்சிகள் எடுக்க வேண்டும் என்றும், அதற்கு அவர் முரண்டு பிடித்தால் கொச்சியில் உள்ள பிளாட் ஒன்றுக்கு கொண்டு செல்ல வண்டியிருக்கும் என கூறினானாம்.
இந்த வேலையை அவர்களுக்கு ஒரு பெண் அளித்ததாகவும் அவர் தான் பாவனாவை காரில் வைத்து சில மணி நேரங்கள் சுற்றிக்கொண்டிருக்கும்படி சொன்னதாகவும் அவர் கூறியுள்ளாராம். பாவனாவை இவ்வளவு கஷ்டத்திற்கு ஆளாக்க நினைத்த அந்த பெண் யார், அதற்கான அவசியம் என்ன என்பது குறித்து இதுவரை போலீசார் விசாரணையில் கூட எந்த தகவலும் வெளியாகவில்லை.