இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
30 வயதை கடந்து விட்ட நயன்தாரா சினிமாவில் தனது பயணத்திலும் சில மாறுதல்களை கொண்டு வந்திருக்கிறார். வெறும் கமர்ஷியல் ஹீரோயினாக அறியப்பட்ட நயன்தாரா, தற்போது வலுவான கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார். பணம் மட்டுமே போதாது நல்ல பெயரும் விருதுகளும் வேண்டும் என்கிற மனநிலைக்கு இப்போது வந்திருக்கிறார். அதற்கேற்ற கதைகளைத்தான் அவர் தேர்வு செய்து நடிக்கிறார். அவரின் இந்த பயணத்துக்கு பிள்ளையார்சுழி போட்டது மாயா. புதுமுக இயக்குனரின் படத்தில் நயன்தாரா நடிக்க ஒப்புக் கொண்டது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. நயன்தாராவின் விருப்பப்படியே மாயா வெற்றி பெற்றது.
இனி ஹீரோக்களை சுற்றி டூயட் பாடுவதை விட தனக்கான முக்கியத்தவத்தை தேடிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படியே டோரா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். மாயா அளவிற்கு டோரா வெற்றி பெறவில்லை என்றாலும் டோரா தோல்வி படம் அல்ல. அடுத்து அவர் நடித்திருக்கும் கொலையுதிர் காலம் திகில் படம். அறம் மக்களுக்காக குறிப்பாக விவசாயிகளுக்காக போராடும் கலெக்டரின் கதை. இப்படி தனது பாதையை நயன்தாரா வகுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த வழியையே 30 வயதை தாண்டி த்ரிஷாவும் பின்பற்றத் தொடங்கினார். அந்த வகையில் அவர் தனது பயணத்தை நாயகி படத்தில் தொடங்கினார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. என்றாலும் அவர் மனம் தளரவில்லை. தற்போது ஹீரோயினுக்கு மட்டுமே முக்கியத்தும் உள்ள மோகினி படத்தில் நடித்து வருகிறார். ஹாலிவுட் தரத்தில் உருவாகும் திகில் படம் இது. அடுத்து ஆக்ஷன், திகில் கலந்த கர்ஜனை படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படமும் ஹீரோ இல்லாமல் திரிஷாவை நம்பியே தயாராகி வருகிறது. 1818 என்ற படமும் த்ரிஷாவை மையப்படுத்திய கதைதான். இதுவரை மலையாளப்ப படங்களில் நடிக்காமல் இருந்த த்ரிஷா தற்போது ஹே ஜூட் என்ற மலையாளப் படத்திலும் நடிக்கிறார். நயன்தாரா, த்ரிஷா இருவருமே இதுபோன்ற படங்களுக்காக தங்களது சம்பளத்தையும் கணிசமாக குறைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.