ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை சவுகார் ஜானகி தென்னிந்திய சினிமாவின் முக்கியமான நடிகை. கடந்த 70 வருடங்களாக சினிமாவில் நடித்து வரும் அவர் 350 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கமல், ஹேராம் படத்தை தயாரித்து நடித்தபோது அதில் முக்கியமான கேரக்டரில் நடிக்க சவுகார் ஜானகி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதற்கு சம்பளம் பேசப்பட்டு அதில் ஒரு பகுதி முன்பணமாக தரப்பட்டது. அவரும் நடித்துக் கொடுத்தார். ஆனால் படத்தில் சவுகார் ஜானகி நடித்த ஒரு காட்சிகூட இடம்பெறவில்லை. இதனால் சவுகார் ஜானகி வருத்தப்படவில்லை. கமல் எது செய்தாலும் நல்லதுக்குதான் செய்வார் என்று இருந்துவிட்டார். இதனால் மீதி சம்பளத்தையும் அவர் கேட்கவில்லை.
அன்றிலிருந்து சில மாதங்களுக்கு பிறகு சவுகார் ஜானகி தனியார் மருத்துவமனை ஒன்றில் இருதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்தார். அந்த நேரத்தில் கமலிடம் இருந்து வந்தது ஒரு பெரிய தொகை. தாங்கள் ஹேராம் படத்தில் நடித்ததற்கான சம்பளமும் எனது சன்மானமும் என்ற எழுதி அதனை அனுப்பி இருந்தார். அது சவுகார் ஜானகிக்கு பேசப்பட்ட சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகமானது. இதனால் என் உயிரைக் காப்பாற்றியவர் கமல் என்று சவுகார் ஜானகி எப்போதும் குறிப்பிடுவார்.