'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆர்யாவின் தம்பி சத்யா பெங்களூரில் ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தார். அவரிடம் நண்பர்கள் சிலர் சினிமா ஆசையை தூண்டி விட, வேலையை ரிசைன் பண்ணி விட்டு, சென்னைக்கு வந்து என்னையும் நடிகராக்க வேண்டும் என்று அண்ணன் ஆர்யாவிடம் மல்லுக்கு நின்றார். அதன்பிறகுதான் புத்தகம் என்ற படத்தில் சத்யாவை அறிமுகம் செய்தார் ஆர்யா. ஆனால் அந்த படம் வெற்றிபெறாததால் அடுத்தபடியாக சத்யாவுக்கு புதிய படம் புக்காகவில்லை. அதனால் அமரகாவியம் என்ற படத்தை தானே தயாரித்தார் ஆர்யா. ஆனால் அந்த படமும் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. அதன்பிறகு நடித்த எட்டுத்திக்கும் மதயானையும் சத்யாவுக்கு கை கொடுக்கவில்லை. அதனால் அவர் அடுத்தபடியாக கமிட்டான படங்கள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், தற்போது அமீர் இயக்கும் சந்தனத்தேவன் படம் மூலம் மீண்டும் நாயகனாக என்ட்ரியாகியுள்ளார் சத்யா. இந்த படத்தில் ஆர்யாவும் இன்னொரு நாயகன். என்றாலும் சத்யாவை தூக்கி நிறுத்த வேண்டும் என்பதற்காக கதையில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். மேலும், சந்தனத்தேவன் படப்பிடிப்பு தளத்தில் எந்நேரமும் கலகலப்பாக காணப்படும் ஆர்யா, தனது தம்பி சத்யாவுடன் ரொம்ப பிரண்ட்லியாக பழகுகிறாராம். இதே படத்தில் நடிக் கும் அதிதிமேனன், கிருத்திகா ஆகியோரை அண்ணன் தம்பி என இருவரும் சேர்ந்தே கலாய்க்கிறார்களாம். இப்படி அண்ணனும், தம்பியும் சேர்ந்து கொண்டு சில சமயங்களில் ஓவராக கிண்டல் செய்வதால் அதை தாக்குப்பிடிக்க முடியாமல் அம்மணிகள் இருவரும் தெறித்து ஓடுகிறார்களாம். ஆக, இதுவரை மற்ற நடிகர்களை கூட்டணி சேர்த்து கலாய்த்து வந்த ஆர்யா, இப்போது சொந்த தம்பி சத்யாவையே தனது கலாய்ப்பு கூட்டணியில் சேர்த்துவிட்டார் என்கிறார்கள்.