ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்னை: பாரதிராஜா பன்னாட்டு திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் துவக்க விழா நடைபெற்றறது. விழாவை நடிகர் ரஜினி காந்த் துவக்கி வைத்தார். விழாவில் நடிகர்கள் கமலஹாசன், நாசர், சிவகுமார், கார்த்தி, வைரமுத்து மற்றும் இயக்குனர்கள் பார்த்திபன், பாண்டிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் ரஜினிபேசியதாவது: பாரதிராஜாவுக்கு என்னை பிடிக்கும் ஆனால் பிடிக்காது திரைத்துறை என்பது பாரதிரஜாவின் உயிரோடுபி்ன்னிப்பிணைந்தது. எவ்வளவு சிறப்பாக நடித்தாலும் சிறந்த நடிகன் என ஒத்துக்கொள்ள மாட்டார். மக்களுக்கு பிடித்து விட்டால் ஒரு கலைஞன் செய்யும் அனைத்தையும் ரசிப்பார்கள் .பாரதிராஜாவின் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெறுவார்கள் என கூறினார்.
விழாவில் பேசிய பாண்டிராஜ் இயக்குநர் பாரதிராஜாவின் படத்தை பார்த்ததால் இயக்குனராக ஆசைப்பட்டு சினிமாவிற்கு வந்ததாக கூறினார். தொடர்ந்து பேசிய நாசர் சினிமாவில் நவீன தொழில் நுட்பம் காரணமாக கலைத்துவம் குறைந்து வருவதாக கூறினார்.
கமல் பேசியதாவது: தடைகளை தாண்டி கலைஞனை உருவாக்க தெரிந்தவர் பாரதிராஜா : சினிமா என்பது பல பேர் சேர்ந்து உருவாக்கும் ஒரு ஜனநாயக கலை .கற்றவித்தையை மற்றவர்க்கும் கற்று கொடுக்க உள்ள பாரதிராஜா சமண முனிவருக்கு ஈடானவர் என கூறினார்.
நான் உருவாக்கவில்லை: பாரதிராஜா: கலைஞர்களை நான் உருவாக்கவில்லை. அவர்கள் அனைவரும் திறமையுடன் வந்தவர்கள். திறமையுடன் வந்த அவர்களை நான் பட்டை மட்டும் தீட்டினேன். வேறு துறையில் சாதிக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் இந்த அளவிற்கு சாதித்திருப்பேனா என தெரியாது.வெறும் ரூ.330 உடன் லாரி ஏறி சென்னைக்கு வந்தேன். திரைத்துறையை என்னுடைய வாழ்க்கையை முழுமையாக்கியது.என பாரதிராஜா கூறினார்.
இன்று துவக்க விழா கண்டுள்ள பாரதிராஜா இண்டர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சினிமா என்ற திரைப்பட பயிற்சி நிறுவனம் திரைக்கதை அமைப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, சவுண்ட் இன்ஜினியரிங், எடிட்டிங், நடிப்பு உள்ளிட்ட பல பிரிவுகளில் பாடம் கற்றுத்தரப்பட உள்ளது. நம் திரைக்கலையை தொழில் நுட்பத்தோடு இணைந்து இந்திய திரையுலகை உலகதரத்திற்கு உயர்த்தும் முயற்சியே இது என பயிற்சி நிறுவனம் குறித்து பாரதிராஜா கூறினார்.