ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
64வது தேசிய விருதுகள் கடந்தவாரம் அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருதுகள் அறிவிப்பு வரும் போதெல்லாம் விமர்சனங்கள் வருவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டும் அப்படி ஒரு விமர்சனம் எழுந்துள்ளது. தேசிய விருதுகளைப் பற்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கடந்தவாரம், தேசிய விருதுகள் பாரபட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது, தொடர்ந்து பிரியதர்ஷன் உள்ளிட்டோர் இதற்கு பதிலளித்தனர்.
இந்நிலையில் மீண்டும் முருகதாஸ் டுவிட்டரில் தேசிய விருது பற்றி சர்ச்சை கிளப்பி உள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது... ‛‛நடுவர்களே இது என்னுடைய கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த ரசிகர்களின் குரலும் கூட, என்னிடம் விவாதம் செய்வதை விட உண்மையை அனைவரிடமும் எடுத்து கூறுங்கள்'' என்று கூறியுள்ளார்.