'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
விஜய் சேதுபதியின் சினிமா பயணத்தில் திருப்புமுனை தந்த படங்களில் முக்கியமானது ‛நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்'. ‛‛என்னாச்சு..., ப்பா... யாருடா இவ... பேய் மாதிரி இருக்கா....'' என இரண்டு வசனங்களை வைத்தே படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கினார். இப்படத்தை பாலாஜி தரணீதரன் இயக்கினார். அதன்பின்னர் விஜய் சேதுபதி மளமளவென பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் பாலாஜி தரணீதரனோ நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராமை வைத்து ‛ஒரு பக்க கதை' என்ற படத்தை மட்டும் இயக்கினார். இப்படம் பல்வேறு பிரச்னைகளால் முடங்கிபோனது. தற்போது ரிலீஸ்க்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியும், பாலாஜி தரணீதரனும் மீண்டும் இணைவதாக நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். படத்திற்கு சீதக்காதி என்று பெயரிட்டுள்ளனர். விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாகி வரும் இப்படம் இன்று தமிழ் புத்தாண்டில் முறைப்படி ஆரம்பமானது. விஜய்சேதுபதி, பாலாஜி, காயத்திரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.