'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, குறிப்பாக சொல்லப்போனால் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையன்று கேரளாவில் தியேட்டர்கள் ஸ்ட்ரைக்கால் புதிய படங்கள் வெளியாக முடியாத சூழல் ஏற்பட்டது.. இந்த ஸ்ட்ரைக்கின் பின்னணியில் இருந்து போராட்டத்தை தூண்டி விட்டவர் கேரள சினிமா எக்சிபிடர்ஸ் சங்க தலைவராக இருந்த லிபர்ட்டி பஷீர்.. கிட்டத்தட்ட ஒரு மாதம் கழிந்த நிலையில் நடிகர் திலீப்பின் முயற்சியால் புதிய சங்கம் ஒன்று உருவாக்கப்பட, லிபர்ட்டி பஷீரை அம்போவென விட்டுவிட்டு தியேட்டர்காரர்கள் திலீப்பின் சங்கத்தில் இணைந்துகொண்டனர்..
அந்தவகையில் லிபர்ட்டி பஷீருக்கும் திலீப்புக்கும் இடையே ஒரு பனிப்போர் நடைபெற்றது.. திலீப்பை பொறுத்தவரை, “தியேட்டர்களை முடக்கி படங்களை வெளியிடாமல் தடுக்கும் லிபர்ட்டி பஷீரின் போக்கைத்தான் நான் கண்டித்து பேசினேன்.. ஆனால் அவரோ எனது பர்சனல் விஷயங்களை எல்லாம் விமர்சிக்க ஆரம்பித்ததுதான் எனக்கு அவர் மீது கோபத்தை உண்டாக்கியது. நானாவது ஒரு திருமணம் செய்து, பின் முறைப்படி விவாகரத்து செய்து, இப்போது ஊரறிய மறுமணம் செய்துள்ளேன். ஆனால் லிபர்ட்டி பஷீருக்கோ கிட்டத்தட்ட மூன்று மனைவிகள் இருக்கின்றனர்.. இதையெல்லாம் பற்றி நாங்கள் பேச ஆரம்பித்தால் என்ன ஆகும்” என தற்போது லிபர்ர்ட் பஷீர் விஷயத்தில் தனது நிலைப்பாட்டை கூறியுள்ளார் திலீப்.