ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தபோது அங்குள்ள ஸ்ரீநகரின் கரல்போரா என்ற ஊரில் சிஆர்பிஎப்., வீரர்கள் மீது அங்குள்ள இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதோடு பல்வேறு பிரபலங்களும் கண்டன குரல் எழுப்பினர். இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு நடிகர் கமல்ஹாசனும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தன்து டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது... ‛‛இந்தியாவுடன் ஒன்று சேருங்கள். சிஆர்பிஎப்., வீரர்கள் மீது நடத்திய தாக்குதல் மிகவும் வெட்கப்பட வேண்டிய செயல். தாக்கிய இளைஞர்கள் மீது பதிலுக்கு தாக்குதல் எதுவும் நடத்தாமல் அகிம்சையே வீரத்தின் உச்சம் என அந்த வீரர்கள் சிறந்த உதாரணத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.