இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
எந்திரன் இரண்டாம் பாகமான 2.O-வில் ரஜினியை விட அக்ஷ்ய் குமாருக்கு தான் அதிக சம்பளம் என்று கூறப்படுகிறது. இந்திய சினிமாவே ஆவலோடு எதிர்பார்க்கும் இரண்டு படங்களில் ஒரு படமான பாகுபலி-2 இம்மாதம் வெளியாக இருக்கிறது. மற்றொரு படமான 2.O தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் மற்றும் எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லைகா புரொடக்ஷ்ன்ஸ் பிரமாண்டமாய் தயாரிக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட் முடியும் தருவாயில் உள்ளது. ரஜினி தன் பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு ஓய்வெடுத்து வருகிறார்.
இதனிடையே 2.O படம் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிக்கு வில்லனாக தான் அக்ஷ்ய் குமார் நடிக்கிறார். ஆனாலும் இப்படத்தில் ரஜினியை விட அக்ஷ்ய் குமாருக்கு தான் சம்பளம் அதிகமாம். நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.2 கோடி அவருக்கு சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய சினிமாவிலே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.350 முதல் 400 கோடி செலவில் 2.O படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இறுதிக்கட்ட ஷூட்டிங் உடன் விஎப்க்ஸ் உள்ளிட்ட போஸ்ட் பணிகளும் மும்முரமாய் நடந்து வருகிறது. வருகிற தீபாவளி தினத்தில் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிரமாண்டமாய் ரிலீஸாக இருக்கிறது.