‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சின்ன சின்ன ரோல்களில் நடித்து சினிமா வாழ்க்கையை துவக்கியவர் யோகி பாபு. படிப்படியாக முன்னுக்கு வந்து இப்போது முன்னணி காமெடி நடிகராகியிருக்கிறார். சமீபத்தில் அவரை ஹீரோவாக நடிக்க வைக்க சிலர் முயற்சித்தார்கள். அதனை அவர் நிராகரித்து விட்டார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
நிறையபேர் ஹீரோவாக நடிக்க கேட்டு வந்தார்கள். ஆனால் நான் ஒத்துக் கொள்ளவில்லை. என் உயரம் எனக்குத் தெரியும். கோமாளி ஹீரோவானால் மக்கள் ரசிக்க மாட்டார்கள். ஒரு வேளை முதல் படம் ஜெயித்துவிட்டால் அதன்பிறகு ஹீரோவா, காமெடியனா என்ற தள்ளாட்டம் வந்து விடும். என் முகத்தை வைத்து எத்தனை படம் ஹீரோவாக எடுத்து விட முடியும். நான் ஹீரோவாக நடித்தால் என் வாழ்க்கையும் வீணாப்போகும் என்னை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் வாழ்க்கையும் வீணாப்போகும். அதனால் நடிக்கிற காலம் வரை காமெடியனாகவே நடித்துவிட முடிவு செய்திருக்கிறேன் என்கிறார் யோகி பாபு.