ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ஸ்பைடர் ஜுன் 28ம் தேதி வெளியாகும் போது தமிழ் ரசிகர்களுக்கும் மகேஷ் பாபுவைப் பற்றி நன்றாகத் தெரிந்துவிடும். மகேஷ் பாபு பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு தகவல். அவர் சென்னையில் பிறந்து, படித்து வளர்ந்தவர்தான். சிவாஜி வீட்டிற்கு எதிரில்தான் மகேஷ் பாபு வீடு இருந்ததாம். அவருடன் கார்த்தி, சூர்யா, யுவன்ஷங்கர் ராஜா ஒரே பள்ளியில் படித்தவர்கள். பள்ளிப் படிப்பை முடித்ததும் சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில்தான் மகேஷ் பாபு படித்தார். சுமார் 25 வருடங்கள் அவர் சென்னையில்தான் இருந்தார். அதன் பிறகுதான் ஆந்திரவாசி ஆனார்.
தெலுங்கில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் மகேஷ்பாபுவும், விஜய்யும் மணிரத்னம் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பே பொன்னியின் செல்வன் படத்திற்காக ஒன்று சேர்ந்து நடித்திருக்க வேண்டியதாம். மேக்கப் டெஸ்ட்டுகள் எடுத்து முடித்த பின்னும் சிலபல காரணங்களால் அந்தப் படத்தை ஆரம்பிக்காமல் விட்டுவிட்டார்களாம். விஜய் இப்போதும் தனக்கு நெருங்கிய நண்பர்தான் என்கிறார் மகேஷ் பாபு.
மகேஷ் பாபுவின் ஆக்ஷன் படங்களுக்கு தெலுங்கு ரசிகர்களிடம் எப்போதும் தனி வரவேற்பு இருக்கும். அவருடைய ஒக்கடு, போக்கிரி ஆகிய படங்களை தமிழில் ரீமேக் செய்து நடித்து பெரும் வெற்றியைப் பெற்றவர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் மீண்டும் சேர்ந்து நடிக்கும் முயற்சிகள் நடக்குமா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.