ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள திரையுலகை பொறுத்தவரை, நடிகர்கள் மட்டுமல்ல, மஞ்சு வாரியர் போன்ற ஒருசில நடிகைகளும் அவ்வப்போது சமூகத்துக்கு தங்களால் பயனுள்ள விஷயங்களை செய்ய தயங்குவதில்லை என்பதை சமீபத்திய நிகழ்வு ஒன்று வெளிக்காட்டியுள்ளது. கேரளாவில் ஆழப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிபேடு என்கிற பகுதியில் உள்ள அர்ச்சா மற்றும் ஆதிரா என பள்ளிக்கூடம் செல்லும் இரு சிறுமிகள் பள்ளி முடித்து வந்ததும் தங்குவது ஸ்டேஷன் அருகில் உள்ள ஒன்றுக்கும் உதவாமல் நிறுத்திவைக்கப்பட்டு இருக்கும் ரயில் பெட்டிகளில் தான் என்பது மஞ்சு வாரியருக்கு தெரியவந்தது.
அந்த சிறுமிகளும் அவரது பெற்றோரும் வறுமை காரணமாக குடியிருக்க சொந்த வீடு இல்லாமல் அந்த பெட்டிகளில் உள்ள குறைந்த வசதிகளை வைத்து அதையே வீடாக பயன்படுத்தி வந்துள்ளனர்.. இந்த விபரம் மஞ்சு வாரியருக்கு தெரியவந்ததும், தனது சொந்த செலவில் அவர்களுக்கு 5 சென்ட் நிலத்தில் கட்டப்பட்ட அழகான வீடு ஒன்றை வழங்கியுள்ளார். மேலும் தனக்கிருந்த நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துவிட்டு, இந்த இந்து புதுமனை புகும் விழா நிகழ்வில் கலந்துகொண்டு அந்த எளிய குடும்பத்தினரின் முகத்தில் மகிழ்ச்சி பூக்க செய்துள்ளார் மஞ்சு வாரியர்.