டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பல்வேறு துறைகளில் சாதித்தவர்ளுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது இந்திய அரசு. அதன்படி 2017-ம் ஆண்டுக்கான பத்மவிருதுகள் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டன. இதில் கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக பிரபல பின்னணி பாடகர் கேஜே யேசுதாஸ்க்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகள் வழங்கும் விழா இன்று(ஏப்., 13-ம் தேதி) ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. யேசுதாஸ்க்கு பத்மவிபூஷண் விருது வழங்கி கவுரவித்தார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.
கேரள மாநிலம் கொச்சியில் பிறந்த கட்டசேரி ஜோசப் யேசுதாஸ், தமிழில் வீணை எஸ்.பாலசந்தர் இயக்கிய பொம்மை படத்தில் நீயும் பொம்பை நானும் பொம்மை என்ற பாடலை பாடி அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, உள்ளிட்ட இந்தியாவின் அநேக மொழிகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். யேசுதாஸ் கிறிஸ்தவராக இருந்தபோதும் தீவிர ஐய்யப்ப பக்தர், இவர் பாடிய ஹரிவராசனம் பாடல் பாடிய பிறகு தான் கோவில் நடை சாத்தப்படுகிறது.
ஏற்கனவே 1975ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2002-ம் ஆண்டு பத்மபூஷண் விருதும் வழங்கி கவுரவித்த இந்திய அரசு, இப்போது பத்மவிபூஷண் விருது வழங்கி கவுரவப்படுத்தியிருக்கிறது. இதுதவிர 7 முறை தேசிய விருது, 43 முறை பல்வேறு மாநில விருதுகள், 5 முறை பிலிம்பேர் விருதுகள் உட்பட இவர் பெற்ற விருதுகள் ஏராளம்.