ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் சேதுபதிக்கு மக்கள் மத்தியில் கவன ஈர்ப்பு கிடைக்க காணமான படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். பாலாஜி தரணீதரன் இயக்கிய இந்தப் படத்துக்குப் பிறகே விஜய்சேதுபதி மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர்கள் அவரைத் தேடிப்போனார்கள். விஜய்சேதுபதிக்கு லைஃப் கிடைக்க காரணமான 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' பட இயக்குநர் பாலாஜி தரணீதரன் அந்தப்படத்தை தொடர்ந்து 'ஒரு பக்க கதை' என்ற படத்தை இயக்கினார். பல வருடங்களாக அந்தப் படம் முடங்கிக்கிடக்கிறது.
நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் இருவரும் கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஒரு பக்க கதை படத்தினால் பல வருடங்கள் முடங்கிப்போனார் இயக்குநர் பாலாஜி தரணீதரன். எனவே தன்னுடைய நண்பருக்கு உதவும் எண்ணத்தில், இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார் விஜய்சேதுபதி.
இயக்குனர் பாலாஜி தரணீதரனும், நடிகர் விஜய்சேதுபதியும் மீண்டும் இணைகிற படத்திற்கு 'சீதக்காதி' என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கவிஞர் சீதக்காதி பெயரை தலைப்பாகக் கொண்டு உருவாகும் இந்த படம் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகவிருக்கிறது என்று தகவல் அடிபடுகிறது.