தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் மட்டுமல்ல பாகிஸ்தானிலும் நல்ல வரவேற்பு உண்டு. ஆனால் இந்தியா - பாகிஸ்தான் உறவில் அவ்வளவாக சுமூகம் இல்லாததால் இந்திய படங்கள் அங்கு ரிலீஸாவதில்லை. சமீபமாக அமீர்கானின் தங்கல் படமும் இந்த சர்ச்சையை சந்தித்தது. இந்நிலையில் வித்யாபாலன் நடிப்பில் உருவாகியுள்ள ‛பேகம் ஜான்' படம் நாளை வெளிவர இருக்கிறது. ஆனால் இப்படம் பாகிஸ்தானில் ரிலீஸாகவில்லை.
இதுப்பற்றி தயாரிப்பாளர் மகேஷ் பட் கூறியிருப்பதாவது... ‛‛இந்திய - பாகிஸ்தான் பிரச்னையால் நிச்சயம் இந்தப்படம் பாகிஸ்தானில் ரிலீஸாகாது என்று தெரியும். இருந்தாலும் எனது விநியோகஸ்தர் மூலமாக பாகிஸ்தான் சென்சார் அதிகாரிகளை இந்தப்படத்தை பார்க்க சொன்னேன். ஆனால் அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஆகையால் எனது விநியோகஸ்தர் பேகம் ஜான் பாகிஸ்தானில் ரிலீஸாகாது என்று கூறிவிட்டார் என கூறியுள்ளார்.