'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மாவீரன் திலீபன் என்ற படத்தை இயக்கியவர் ஆனந்தமூர்த்தி. சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்ற இந்தப் படம் தமிழ்நாட்டில் வெளிவரவில்லை. தற்போது சினம் என்ற ஆவணப்படத்தை இயக்கி இருக்கிறார். சரவண நடராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். லண்டன் நேசன் கிரியேஷன் சார்பில் நேசன் திருநேசன் தயாரித்துள்ளார்.
இது மும்பையில் வசிக்கும் ஒரு பாலியல் தொழிலாளியின் கதை. ஒரு ஆவணப் பட இயக்குனரிடம் ஒரு பாலியல் தொழிலாளி வந்து தன் கதையை படமாக எடுக்குமாறு கூறுகிறாள். அவள் தன் கதையை கூற அதை படமாக எடுக்கிறார் ஆவணப்பட இயக்குனர். இதுதான் படத்தின் கதை. இதில் ஆவணப்பட இயக்குனராக பாலிவுட் நடிகை பட்டியா பக் நடித்துள்ளார். பாலியல் தொழிலாளியாக தன்ஷிகா நடித்துள்ளார். இதுபற்றி இயக்குனர் திலீபன் கூறியதாவது:
மும்பை சிவப்பு விளக்கு பகுதிக்குள் வாழும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு கதை இருக்கிறது. அதைக் கேட்டால் மாற்று பெண்ணை தொடக்கூட மனசு கூசும். அப்படி ஒரு கதையை படாக்க விரும்பினேன். அதில் நடிக்க நல்ல தமிழ் பேசத் தெரிந்த சமூக அக்கறை உள்ள நடிகை தேவைப்பட்டார். அதற்கு தகுதியான ஒருவர் தன்ஷிகா தான். அவரை அணுகியபோது கதை கேட்டுவிட்டு உடனே நடிக்க ஒப்புக் கொண்டார்.
அவரது வாய்ஸ் ஓவரில்தான் கதை நகரும். படத்தில் நடிக்க ஒரு பைசாகூட அவர் சம்பளமாக பெற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் எங்களால் முடிந்ததை கொடுக்க முன்வந்தபோதும் மறுத்து விட்டார். இதை சினிமாவாக எடுத்திருக்கலாம். ஆனால் தணிக்கை குழுவை தாண்டி படம் வெளிவராது. அதனால்தான் ஆவணப்படாக எடுத்துள்ளோம். ஆனால் ஒரு சினிமாவுக்கான எல்லா அம்சங்களும் படத்தில் இருக்கும் என்கிறார் ஆனந்த் மூர்த்தி.