பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழில் சிலந்தி படத்தை இயக்கிய ஆதிராஜன் தற்போது தமிழ் மற்றும் கன்னட மொழியில் இயக்கி வரும் படம் அதர்வனம், விஜயராகவேந்திரா, ஹரிப்ரியா நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் கன்னட தலைப்பு ரணதந்திரா. தற்போது அதர்வனம் தலைப்பை சிலந்தி 2 என்று மாற்றியிருக்கிறார்கள். இதுகுறித்து இயக்குனர் ஆதிராஜன் கூறியதாவது:
பெங்களூர், கோவா, மைசூர் சாமுண்டி ஹில்ஸ் உட்பட பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. தமிழ், கன்னட மொழிகளில் உருவான 'ரணதந்திரா' தமிழில் 'அதர்வனம்'; என பெயரிடப்பட்டிருந்தது. இறுதிக்கட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்த பலர் 'அதர்வனம்' என்ற தலைப்பு புரியவில்லை எனவும், 'சிலந்தி பார்ட் 2' என்பதே இப்படத்திற்கு சரியாக இருக்கும் என்று சொன்னதால் தற்போது சிலந்தி-2 என்ற பெயரில் தயாராகி வருகிறது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
கை நிறைய சம்பாதிக்கும் வேகத்தில் நாகரீக மோகத்தில் நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காற்றில் பறக்கவிட்டு, சுதந்திரம் என்ற பெயரில் எல்லை மீறி சிறகடிக்கத் துடிக்கும் பெண்களால் ஏற்படும் விபரீத விளைவுகளும், அதனால் அந்த பெண்களுக்கு உருவாகும் ஆபத்துக்களையும் மையப்படுத்தி பரபரப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
ரசனையான காதல்.. நாகரீகமான நகைச்சுவை.. அதிரடி சண்டைக் காட்சிகளுடன்.. அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத திரைக்கதையுடன் உருவாகியிருக்கும் இந்த த்ரில்லர் படத்தில் ஒரு ஸ்பெஷலான குத்துப்பாடலுக்கு மேக்னா நாயுடு செமத்தியாக ஆட்டம் போட்டிருக்கிறார். என்கிறார் ஆதிராஜன்.