‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பி.ஜி.முத்தையா-ஆர்.எஸ்.கார்த்திக் இணைந்து தயாரித்துள்ள படம் பீச்சாங்கை. அசோக் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பாலமுரளிபாலு இசையமைக்க, கெளதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது படக்குழுவினருடன் தனஞ்செயன், உறுமீன் டைரக்டர் சக்திவேல் பெருமாள்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது டைரக்டர் சக்திவேல் பெருமாள்சாமி பேசும்போது, கவுன்சிலில் அதை செய்வேன் இதை செய்வேன் என்று சொல்கிறார்கள். அதெல்லாம் பிரச்சினையே கிடையாது. விற்காத படங்கள் எவ்வளவோ உள்ளன. அதை வெளியே கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். மெட்ரோன்னு ஒரு படம் நல்லா ஓடிச்சு. ஏ சான்றிதழ் கொடுத்துட்டாங்க. ரிவைசிங் கமிட்டியில யுஏ கொடுத்தாங்க. அதுக்கு அப்புறம் வித்தாங்க, சின்ன படங்களுக்கு சாட்டிலைட் விற்பனை முக்கியமான விசயம்.
சென்சார் போர்டில் இருக்கிறவங்களோட சட்டதிட்டத்தை பார்த்தீங்கன்னா1950-ல் உள்ளதை இப்பவும் பின்பற்றுறாங்க. அப்போதெல்லாம் போன்கூட கிடையாது. கல்ச்சர் நிறைய மாறிடுச்சு. வெறும் 30 கோடி மக்கள் இருந்தபோது உள்ள சட்டத்தை இப்ப 130 கோடி மக்களுக்கும் சொல்லிக்கிட்டிருக்காங்க. அது எப்படி பொருந்தும். சட்டதிட்டங்களையெல்லாம் மாத்தனும். விவசாயிகளையெல்லாம் அப்புறம் காப்பாத்திக்கலாம். அவங்களை காப்பாற்ற நிறைய பேர் இருக்காங்க. முதல்ல நம்மளை காப்பாத்திக்குவோம். சென்சார் போர்டு சட்டதிட்டங்களை மாற்றுவதற்கு யாராவது அமைச்சர்களிடம் பேசனும். அப்போதுதான் சின்ன படங்களுக்கு மானியங்கள் கிடைக்கும், சினிமா வாழும். இந்த கோரிக்கைகளை பொறுப்பில் இருக்கிறவங்க செய்யனும் என்று ஆவேசமாக பேசினார்.
அதையடுத்து தனஞ்செயன் பேசுகையில், சக்தி ரொம்பவே பொங்கிட்டாரு. அதுல நியாயம் இருக்கு. மேலும், இன்றைக்கு ஒவ்வொரு வாரமும், 5 முதல் 7 படங்கள் வரை ரிலீசாகின்றன. அதில் ஒரு படம்கூட போட்ட காசை எடுப்பதில்லை. ஏதாவது ஒரு பெரிய படங்கள்தான் ஓரளவு வசூலிக்குது. இந்த வருடத்தில் இதுவரை 51 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் மூன்று படங்கள்தான் கமர்சியல் வெற்றி பெற்றுள்ளன.
தியேட்டர் கிடைக்கல என்பதற்கு காரணம், நிறைய படங்கள் வருவதுதான். ஒரு வாரத்தில் 3 படங்கள் வந்தால் பெறவாயில்லை. ஆனால் 5, 7 என்று வந்தால் மக்கள் எந்த படத்தை பார்ப்பார்கள். இதுதான் படங்களின் தோல்விக்கு காரண மாகிறது. அதேசமயம் சிறந்த படங்களை மக்கள் கொண்டாடவும் செய்கிறார்கள். துருவங்கள் 16, கடுகு, மாநகரம் போன்றவை மக்களால் பாராட்டு பெற்றுள்ளன. மிகப்பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் கதை சரியில்லை என்றால் ஓடுவதில்லை.
ஆக, ஒரே நேரத்தில் பல படங்களை வெளியிடாமல் குறைவான படங்களாக வெளியிட்டு மக்களை பார்க்க வைக்க வேண்டும். ஒரே நேரத்தில் பல படங்கள் வந்தால் மக்கள் கண்டுக்காமல் போய் விடுவார்கள். அதனால் இந்த பீச்சாங்கை படத்தை கூட 5 படத்தில் ஒன்றாக வெளியிடாதீர்கள். 2 படத்தில் ஒன்றாக வெளியிடுங்கள் என்றார்.