டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
திறமையும், முயற்சியும் இருந்தால் போதும் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை அடையலாம் என்பதற்கு பலரை உதாரணமாகச் சொல்லலாம். திரையுலகில் தங்களது சொந்த முயற்சியாலும், திறமையாலும் முன்னுக்கு வந்தவர்கள்தான் நீண்ட காலம் நிலைத்து நிற்கிறார்கள். சிபாரிசு, வாரிசு என வருபவர்கள் வந்த கொஞ்ச காலத்திலேயே காணாமல் போய்விடுவார்கள்.
தங்களது சொந்தத் திறமையால் முன்னுக்கு வந்தவர்களில் ராகவா லாரன்ஸும் ஒருவர். சண்டை இயக்குனர் சூப்பர் சுப்பராயனிடம் உதவியாளராக வேலை பார்த்து வந்த ராகவா லாரன்ஸ், நடனக் கலைஞராக திரையுலகில் நுழைந்து, நடன இயக்குனராக, நடிகராக, இயக்குனராக என மாறி இன்று தமிழ்த் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார்.
'சிவலிங்கா' படத்தின் தெலுங்கு ரிலீஸ் பிரமோஷனுக்குப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ராகவா லாரன்ஸ், தனக்கு வாழ்க்கையில் திருப்புமுனை தந்தவர்கள் என நால்வரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
முதலில் அவருடைய அம்மா, ராகவேந்திரா சுவாமிகள், அடுத்து தன்னை நடனக் கலைஞராகச் சேர்த்து விட்ட ரஜினிகாந்த், நடன இயக்குனராக அறிமுகப்படுத்திய சிரஞ்சீவி ஆகியோர்தான் என்னுடைய வாழ்க்கையில் ஒளி ஏற்றியவர்கள் என்று நன்றி கூறியுள்ளார்.
சினிமாவில் நன்றி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள். ஆனால், தன் வாழ்க்கையில் ஒளி ஏற்றியவர்களை மறக்காமல் நன்றி நினைப்பதால்தான் ராகவா லாரன்ஸ் இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது.