'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
தேசிய விருது பெறுவது ஒவ்வொரு நடிகைகளுக்கும் அதிகபட்ச லட்சியமா இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.. அப்படி விருது கிடைத்துவிட்டால் முன்பை விட பொறுப்பு கூடிவிடும்.. குத்தாட்ட நடிகைகள் கூட குடும்ப குத்து விளக்காக மாறும் சூழல் உருவாகும்..இன்னொரு பக்கம் பிரியமானி போன்றவர்களுக்கு குருவி தலையில் பனங்காய் வைத்தது போல தேசியவிருது கிடைத்ததும், அதன்பின் அவர் அதிகம் பந்தா காட்டி தன்னை தேடிவந்த வாய்ப்புகள் பலவற்றை இழந்ததும் இன்னொரு விதமானட்ராக்..
ஆனால் சமீபத்தில் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருதுபெற்ற மலையாள நடிகை சுரபி லட்சுமி, மலையாளத்தில் ஒன்றும் மிகப்பெரிய ஹீரோயின் இல்லை.. சொல்லப்போனால் அவர் ஹீரோயினே இல்லை.. கதையின் முக்கியமான் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருபவர்.. இப்போது அவருக்கு கிடைத்துள்ள தேசிய விருது அவரைச்சுற்றி ஒரு ஒளிவட்டத்தை உண்டு பண்ணிவிட்டது..