ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் தொடர்ந்து நம்பர் 1 ஹீரோவாக இருப்பவர் சல்மான்கான். 50 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார். சிலதினங்களுக்கு முன் சல்மான்கான், பழம்பெரும் நடிகை ஆஷா பரேக்கின் சுயசரிதை வெளியீட்டு விழாவில் பங்கேற்று அவரின் சுயசரிதையை வெளியிட்டார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய சல்மான், இந்தக்கால நடிகைகள் பற்றி பேசினார்.
சல்மான்கான் கூறியதாவது... "என் வீடு அருகே தான் நடிகை வகீதா ரஹ்மானின் இல்லம் உள்ளது. வகீதா, ஹெலன், சாயிராபானு, ஆஷா, சாதனா உள்ளிட்ட அந்தக்கால நடிகைகள் பலரும் இப்போது வரை ஒற்றுமையாக, நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்களின் காலக்கட்டம் தான் சிறப்பான ஒன்று. ஆனால் இப்போது உள்ள பாலிவுட் நடிகைகளிடம் அந்த ஒற்றுமையில்லை. அந்தகால நடிகைகளின் ஒற்றுமை குணத்தை இனி நம்மால் பார்க்க முடியாது'' என்று வருத்தத்துடன் கூறினார்.
சல்மான்கான், தற்போது கபீர்கான் இயக்கி உள்ள ‛டியூப்லைட்' படத்தில் நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் மும்முரமாய் நடந்து வருகிறது. வருகிற ஜூன் மாதம் 23-ஆம் தேதி படம் ரிலீஸாகிறது.