டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தயாரிப்பாளர் சங்கத் தலைவராகிவிட்ட விஷால் தியேட்டர் டிக்கெட் கட்டணத்திலிருந்து ஒரு டிக்கெட்டிற்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக விஷாலுக்கு பல கேள்விகளை எழுப்பி தங்கர் பச்சான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் எழுப்பியுள்ள கேள்விகளில் சில வருமாறு:
வெளிவரும் தமிழ் சினிமாக்களில் எத்தனை சினிமா விவசாயம் பற்றி பேசுகிறது?
நீங்கள் விவசாயம் சம்பந்தமாக ஒரு படத்திலாவது நடித்திருக்கிறீர்களா?
உங்கள் 15 வருட அனுபத்தில் மக்கள் பிரச்சினை தொடர்பான ஒரு படத்திலாவது நடித்திருக்கிறீர்களா?
தாய்மண் என்ற படத்தில் நான் நடிக்க கேட்டும், உங்களுக்குரிய சம்பளம் தர சம்மதித்தும் நடிக்க மறுத்தது ஏன்?
நடைமுறைக்கு உதவாத வன்முறைகளை விதைத்துக் கொண்டும், பெண் உடலை சந்தைப்படுத்தி ஆடவிட்டுக் கொண்டும்தான் இருக்கிறீர்களே தவிர இயல்பான ஒரு படம் தர முயற்சித்திருக்கிறீர்களா?
நீங்கள் பல படங்களில் நடித்திருக்கிறீர்கள், பல படங்களை தயாரித்திருக்கிறீர்கள் எத்தனை படங்களில் போட்ட முதல் திரும்பி வந்திருக்கிறது?
விவசாயிகள் தற்கொலை தடுக்க பணம் கொடுக்க இருக்கிறீர்கள்? நடிகர்களுக்கு கோடிக் கணக்கில் சம்பளம் கொடுத்து கடனாளியாகி தற்கொலை செய்து கொண்ட தயாரிப்பாளர்கள் பற்றித் தெரியுமா?
நடிகர் சங்க செயலாளர் ஆனதும் நடிகர்கள் சம்பளத்தை குறைத்து தயாரிப்பாளர்களை காப்பாற்ற முன்வந்தீர்களா?
திரைப்படத்தின் லாப நஷ்டத்தில் நடிகர்களும் பங்கேற்க என்ன முயற்சி செய்திருக்கிறீர்கள்?
நான் விவசாயியாகவும் இருக்கிறேன். தயாரிப்பாளராகவும் இருக்கிறேன். முதலில் தயாரிப்பாளர்களை காப்பாற்றுங்கள். பிறகு விவசாயிகளை காப்பாற்றலாம்.
இவ்வாறு தங்கர் பச்சான் பல கேள்விகளை எழுப்பி உள்ளார்.