நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
தமிழ் சினிமாவில் இப்போது பிசியான நடிகை என்றால் அது சாந்தினி தமிழரசன் தான். ஒரே நேரத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கிறார். பல படங்களில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். கடுகு படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். கிடைக்கிற வாய்ப்பு எதையும் விடாமல் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் சாந்தினி.
பர்மா, ஜாக்சன் துரை படங்களை இயக்கிய தரணிதரன் தனது பர்மா பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து, இயக்கும் ராஜா ரங்குஸ்கி படத்தில் எழுத்தாளராக நடிக்கிறார். மெட்ரோ படத்தில் அறிமுகமான ஷிரிஷ் ஹீரோவாக நடிக்கிறார். யுவன் இசை அமைக்கிறார். படத்தில் எழுத்தாளராக நடிப்பது குறித்து சாந்தினி கூறியிருப்பதாவது:
இந்த படத்தில் ரங்குஸ்கி என்கின்ற ஒரு தைரியமான எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கின்றேன். ரங்குஸ்கி என்பது பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் புனைப்பெயர். நகர்ப்புற பெண் வேடத்தில் நடிக்கும் இந்த கதாபாத்திரம், நான் நடித்த மற்ற கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். ராஜா கதாபாத்திரத்தில் நடிக்கும் கதாநாயகன் ஷிரிஷ், எனக்கு பல விதங்களில் உறுதுணையாய் இருப்பது மட்டுமின்றி படப்பிடிப்பு தளத்திலும் பக்கபலமாய் இருக்கின்றார். நிச்சயமாக ராஜா ரங்குஸ்கி, அனைவராலும் விரும்பக்கூடிய ஒரு படமாக இருக்கும். என்கிறார் சாந்தினி தமிழரசன்.