ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வி.கே.பி.டி கிரியேசன்ஸ் சார்பில் டி.வேலு தயாரிக்கும் படம் ‛பள்ளிப்பருவத்திலே'. பிரபல இசை அமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் ஹீரோவாக அறிமுகமாகிறார். கற்றது தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வெண்பா ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர்கள் தவிர தம்பி ராமய்யா, ஊர்வசி, கே.எஸ்.ரவிகுமார் சுஜாதா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வினோத்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் நாராயணன் இசை அமைக்கிறார். "இது பள்ளி மாணவர்கள் பற்றிய கதை தான். ஆனால் மாணவர்களை கவுரப்படுத்தும் கதை" என்கிறார் இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர். படம் பற்றி அவர் மேலும் கூறியதாவது:
கலகலப்பான குடும்ப சூழலையும், பள்ளி மாணவர்களையும் மையப்படுத்தி அமைக்கப் பட்ட காமெடி கலந்த, காதல் கதை. படத்தின் படப்பிடிப்பு 50 நாட்கள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, ஆம்பலாபட்டு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்தது.
நான் யாரிடம் உதவியாளராக சேர வேண்டும் என்று நினைத்தேனோ அதே கே.எஸ்.ரவிகுமார் சாரை எனது இயக்கத்தில் இந்த படத்தில் நடிக்க வைத்தது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். அவரிடம் நான் கதை சொன்னதும், முழுக் கதையையும் கேட்டு விட்டு இது என்ன விருதுக்காக எடுக்கிற படமா என்று கேட்டார். இதே வார்த்தையை தான் கவிப்பேரரசு வைரமுத்துவும் என்னிடம் சொன்னார். இவர்கள் இருவரும் சொன்னதே எனக்கு தேசிய விருது கிடைத்த சந்தோஷம் என்கிறார் வாசுதேவ் பாஸ்கர்.